9 ஆக., 2011

'திருக்குறளைச் சரியாகப் புரிந்து கொள்வோம்'-சுருக்கம் 1

'திருக்குறளைச்சரியாகப் புரிந்து கொள்வோம்’ என்னும் தலைப்பில் 5 நாள் பயிற்சி வகுப்பு தஞ்சை திருப்பூந்துருத்தியிலுள்ள கருணையானந்தர் ஆசிரமத்தில் நடத்தப்பட்டது. நமது ஆசிரியர் முனைவர் தெய்வநாயகம் பின்வருவனவற்றை விளக்கினார்.
1.       திருக்குறளின் மாண்புகள்
2.       திருக்குறள் காட்டும் தமிழரின் அரிய, ஆன்மீகச் சிந்தனைகள்
PDFஆக சேமிக்க

8 ஆக., 2011

திருக்குறளைச் சரியாகப் புரிந்து கொள்வோம்!

(தேநீர்க் கடைத் திண்ணை - காலை வேளை - முருகனும் குமரனும் பேசிக்கொள்கிறார்கள்)
முருகன்: (செய்தித்தாள் தலைப்பை உரக்க வாசிக்கிறார்) ''சம்ச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும்  -தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு”
குமரன்: (அப்போது தான் வந்து உட்கார்கிறார்) அது என்னவோ சமச்சீர் கல்வி?
PDFஆக சேமிக்க

6 ஆக., 2011

திரு - அண்ணாமலையார் திருக்கோயில் தீட்டுப்பட்டது உண்மை தான்!

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரை போல் வாடிப் போனார்கள் என்னுடன் பயின்ற சக அர்ச்சக நண்பர்கள்.
PDFஆக சேமிக்க

திருக்குறள் - கிறித்தவ நூலே!


''திருக்குறள் ஒரு தோமா வழி தமிழ்க் கிறிஸ்தவ நூலே”
சென்னைப் பல்கலைக் கழகம் இவ்வுண்மைக்காக டாக்டர் பட்டம் அளித்தது
PDFஆக சேமிக்க

5 ஆக., 2011

மதவெறி நீங்க கலந்துரையாடல்

மதவெறி நீங்கி கடவுளின் பிள்ளைகள் ஒற்றுமையுடன் வாழ கலந்துரையாடல்
புனித பேதுரு வழிக் கிறிஸ்தவத்தையும், புனித தோமா வழிக் கிறிஸ்தவமாகிய தமிழர் சமயத்தையும் தமிழர் ஆன்மவியல் வழியாக ஒன்றிணைத்து, உலக மக்கள் அனைவரும் மதவெறி நீங்கி அன்புடனும் ஐக்கியத்துடனும் வாழ உழைக்க விரும்பும் அன்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம்.
PDFஆக சேமிக்க

போப்பாண்டவர் மீது வழக்கு

புனித தோமா
போப்பாண்டவர் மீது வழக்குத் தொடர வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருப்பது ஏன்?
  1. இயேசு கிறிஸ்துவின் 12 மாணவர்களில் ஒருவரான புனித தோமையார் 20 ஆண்டுகள் (கி.பி. 52-72) தமிழகத்தில் நற்செய்திப் பணி செய்தார்.
  2. இதன் காரணமாகத் தமிழகத்தில் கி.பி. 5ஆம்      நூற்றாண்டிற்குப் பின்னர் பக்தி இயக்கம் தோன்றியது.
  3. தமிழ்ப் பக்தி இயக்கம் காரணமாகத் தமிழகத்தில் சைவம், வைணவம் என்னும் இரண்டு பிரிவாகத் தமிழர் சமயம் எழுந்தது.
PDFஆக சேமிக்க

3 ஆக., 2011

தமிழர் சமயம் - தமிழ் மண் - தமிழ் நாடு

தமிழர் சமயம்
தந்தை பெரியார் காலத்திற்குப் பின் வாழும் நாம் நம் காலத்தில் தந்தை பெரியாரின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, திராவிட இனத்தின் தலைமை நிலையில் இருக்கும் தமிழ் இன எழுச்சிக்குத் தமிழர் சமயமாகிய இந்து மதத்தின் சிறப்புகளைக் கற்றுக் கொண்டு உலகம் முழுவதுக்கும் உணர்த்தும் பணியை விரும்பி ஏற்றுச் செய்தாக வேண்டும்.  ஏனெனில் தமிழர் சமயம் என்பது உலகில் இருக்கும் மதங்களில் இதுவும் ஒரு மதம் இல்லை.  உலகிலுள்ள மதங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு பொதுப்பெயர் கொடுத்தால் எந்தப் பெயர் அதற்குப் பொருந்துமோ அந்தப் பெயரே தமிழர் சமயம் என்பது ஆகும்.  
PDFஆக சேமிக்க

தமிழர் சமயமும் சாதி ஏற்றத் தாழ்வுக் கொள்கையும்

தமிழர்கள் ஆரியப் பிராமணர்களின் நிறவெறிக் கொள்கையாகிய இந்துத்துவா என்னும் சாதி ஏற்றத் தாழ்வுக் கொள்கைக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதால் தமிழர்களின் இந்து சமயமாகிய தமிழர் சமயம் ஆரியப் பிராமணர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

PDFஆக சேமிக்க

அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?

மதம்

‘தமிழ் இனம் சிங்களர்களால் அழிக்கப்பட்டது’ என்பதில் சிங்களர்கள் ஆரிய இனம் என்று நம்பப்படுகின்ற காரணத்தால் இனம் தொடர்பாக ஆரிய, திராவிட இனம் தொடர்பானவற்றைப் பார்த்தோம். சீனா இலங்கைக்கு உதவும் காரணமான இனம் தாண்டிய மதம் தொடர்பானவற்றைப் பார்க்க வேண்டிய இன்றியமையாமை நமக்கு உள்ளது. 
PDFஆக சேமிக்க

இந்துத்துவாவின் வேறு பெயர்கள்

இந்துத்துவா வேறு இந்து மதம் வேறு என்பதை முன்பே பார்த்திருக்கிறோம்.  

சாதி ஏற்றத்தாழ்வு = பிராமணியம்
இந்துத்துவா என்பது “ஆரியர் பிறப்பால் உயர்ந்தவர், திராவிடர் பிறப்பால் தாழ்ந்தவர்” என்பதை ஏற்றுக் கொண்டு வாழும் ஆரிய வாழ்க்கை முறையாகிய சாதி ஏற்றத் தாழ்வுக்கொள்கை ஆகும். 

PDFஆக சேமிக்க

இந்து மதம் என்பது தமிழர் மதமே!

இந்து மதம் என்பது சைவம், வைணவம் ஆகிய இரண்டு சமயங்களின் இணைப்பே ஆகும். 
  • சைவ மதத்தை உருவாக்கிய நாயன்மார் அறுபத்து மூவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள்.
  • வைணவ மதத்தை உருவாக்கிய ஆழ்வார்கள் பன்னிருவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள். 
  • சைவ மத இலக்கியமான பன்னிரு திருமுறை தமிழிலேயே இருக்கிறது.
PDFஆக சேமிக்க

ஆரியர் என்பவர் ஓர் இனத்தவர் அல்லர்!

                        இந்துத்துவா உருவான வரலாறு – 4
ஆரியர்கள் ஓர் இனத்தவர்கள் அல்லர்; ஆரியம் என்பது ஒரு கூட்டமைப்பு
இந்து மதம் என்பது தமிழர் மதங்களாகிய சைவத்தையும் வைணவத்தையும் குறிக்கிறது. 

இந்துத்துவா என்றால் என்ன?
PDFஆக சேமிக்க

2 ஆக., 2011

இந்துத்துவா உருவான வரலாறு - 3

இந்துமதம் என்னும் பெயர் வந்த வரலாற்றுப் பின்னணி

கி.பி. 1750க்குப் பின்னர் ஆங்கிலேயர் இந்தியாவின் சில பகுதிகளைப் பிடித்து ஆளத் தொடங்கினர்.  அப்போது ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த இந்தியப் பகுதிகளுக்குத் தலைநகராகக் கல்கத்தா விளங்கியது.  ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய கடமை ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டது.  அதனால் நீதிமன்றங்களை அமைத்தார்கள்.  நீதிமன்றங்களில் நீதி வழங்கச் சட்டம் தேவைப்பட்டது. 
PDFஆக சேமிக்க

இந்துத்துவா உருவான வரலாறு - 2

இந்துத்துவம் வேறு இந்து மதம் வேறு

சர் வில்லியம் சோன்சு

            மனுநூல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வருணாசிரமக் கொள்கையாகிய சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்குக் கி.பி.1794இல் சர் வில்லியம் சோன்சு (Sir William Jones) என்னும் ஆங்கில நீதிபதி ‘Hinduism’ என்று புதுப்பெயர் கொடுத்தார்.  

PDFஆக சேமிக்க

இந்துத்துவா உருவான வரலாறு -1

“நாங்கள் இந்தியாவை இந்து மதச் சார்பான நாடாக்க விரும்பவில்லை.  இந்துத்துவ நாடாக்கவே விரும்புகின்றோம்.  ‘இந்துத்துவம்’ – என்பது இந்தியப் பண்பாடு. இந்தியாவை அதன் பழைய பண்பாட்டுக்குக் கொண்டு வரவே விரும்புகின்றோம்.  எங்களை மதவாதிகள் என்பது தவறு.  இந்து மதம் வேறு; இந்துத்துவம் வேறு. இதைக் குறித்து யாருடனும் விவாதிக்க நான் தயாராக இருக்கின்றேன்.” -என்று அன்றைய இந்தியத் துணைப் பிரதமர் அத்வானி 25.5.2003இல் வெளியிட்ட கருத்துகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. 

PDFஆக சேமிக்க

1 ஆக., 2011

Theological Foundation of Hindu Religion


1) Saivism and Saiva Sittantha
The devotional literature of the Bhakthi movement is known as 'Panniru Thirumurai' and the fourteen Sastras of the theological exposition are known as 'Saiva Sittanta Sastras'. Sivagnanapotham by Meykanta Tevar is regarded as the basic text of the Saiva Sittanta Sastras. The Saiva Sittanta Sastras are also known as the Meykanta Sastras.
Sivagnanapotham, the basic text of Saiva Sitthanta explains from the creation of man to salvation.
PDFஆக சேமிக்க

Myths in Hindu Religion

After Christianity started developing in India, the doctrine of trinity was envisioned in different angles in myths. When the trinity was explained as Father, Holy Spirit and Son, some envisioned the Holy Spirit in a female form. According to this group, in a family, if there is a father and a son, naturally there would be a mother in between them. So, they envisioned the Holy Spirit as mother or Sakthi or Power and they explained the trinity as Appan (father), Ammai (mother-Sakthi) and Makan (Son). They also explained Siva (which means love), Sakthi and Kumarakkadavul (son of God) as Somaskanda. Somaskanda is a Sanskrit word (Sa+Uma+Skanda) which means God who is with Uma (Mother) and Skanda (Son). This is known as Saivism.
PDFஆக சேமிக்க

திருநீறா? சிலுவையா? – 7

பழைய ஏற்பாட்டில்: கண்களுக்கிடையில் நினைவுச்சின்னம்
“ஆண்டவரின் சட்டம் உன் உதடுகளில் ஒலிக்கும்படி இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களிடையில் நினைவுச் சின்னமாகவும் இருக்கட்டும்” (விடுதலைப் பயணம் 13:9)
புதிய ஏற்பாட்டில்: நெற்றியில் பொறித்திருந்தனர்
“சீயோன் மலை மீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன்.  அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேர் அதனுடன் இருந்தனர்.  (திருவெளிப்பாடு 14:1)
PDFஆக சேமிக்க

திருநீறா? சிலுவையா? - 6

திருநீறும் திருமண்ணும்
சைவர்கள் திருநீற்றால் தங்கள் அடையாளத்தையும் வைணவர்கள் திருமண்ணால் தங்கள் அடையாளத்தையும் தங்கள் நெற்றிகளில் இடுகின்றார்கள்.   சைவத்திலிருந்து வைணவம் பிரிந்த பின்னரே திருநீற்றிலிருந்து திருமண் பயன்படுத்தப்பட்டது என்பது வரலாறு.  மரணம், உயிர்த்தெழுதல், பாவ மன்னிப்பு மூன்றையும் திருநீறு விளக்கி நின்ற நிலையை முன்னர்ப் பார்த்தோம்.  
PDFஆக சேமிக்க

திருநீறா? சிலுவையா? – 5

குறிப்பு: பின்னூட்டமிடுவோர் இத்தொடரின் முதல் நான்கு பதிவுகளையும் படித்து விட்டுப் பின்னூட்டமிடுங்கள். தொடர் இன்னும் விரியும்..
சைவ வைணவ சமயங்கள் என்பன இரண்டு தனித்தனிச் சமயங்கள் அல்ல.  சைவத்தின் கிளையே வைணவம் ஆகும்.  அன்பின் மறுபெயர் ‘சிவன்’ என்பதாகும்.  சைவம் என்பது சிவனை அடிப்படையாகக் கொண்டது.  சிவபெருமானின் உடலின் இடப்பாகத்தைப் பெண்ணாகக் கூறினால் அது சைவம்.  அதையே ஆணாக கூறினால் அது வைணவம்.
PDFஆக சேமிக்க

திருநீறா? சிலுவையா? - 4

திருநீற்றைப் பயன்படுத்தும் திருச்சபை
ஐரோப்பியர் பிடியில் சிக்காமலும் சிலுவை அடையாளத்தைப் பயன்படுத்தாமலும் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு முன்னர் உலகில் பரவி, திருநீற்றை அடையாளமாகப் பயன்படுத்தி வரும் கிறித்துவின் திருச்சபைப் பிரிவினர் உலகில் இருக்கின்றார்களா?  என்று தேடிப் பார்க்க வேண்டியது இப்பொழுது அவசியமாகிறது.

PDFஆக சேமிக்க

திருநீறா? சிலுவையா? - 3

சாம்பலும் உயிர்த்தெழுந்த உடலும்

செங்கிடாரி ஊருக்கு வெளியே பலியிடப்பட்டுத் தகனம் செய்யப்பட்டு சாம்பல் உருவாக்கப்பட்டது போன்று, இயேசு கிறித்துவும் எருசலேமுக்கு வெளியே பலியிடப்பட்டு அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்தார்.  உயிர்த்தெழுந்த இயேசுவைப் போன்று சாம்பல் விளங்குகின்றது.  எவ்வாறு?
PDFஆக சேமிக்க

திருநீறா? சிலுவையா? - 1

“திருநீற்றுத் திருநாள்” என்று சிறப்பிக்கப்படுவது சாம்பல் புதன்கிழமை.  கிறித்தவத் திருநாள்களில் சாம்பல் புதன்கிழமை ஒரு முக்கியமான நாள் ஆகும்.  இயேசு கிறித்துவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதல் இவற்றை நினைவு கூர்ந்து அதற்கென நோன்பு மேற்கொள்ளும் தபசுகாலத்தின் தொடக்க நாள் திருநீற்றுத் திருநாள் அல்லது சாம்பல் புதன்கிழமை ஆகும்.
PDFஆக சேமிக்க

கிறித்துவின் நற்செய்தியை அறிவிக்கும் அடையாளம் சிலுவையா? - 3

ஐரோப்பிய அரசியல் மதம்
            கான்சுடன்டைன் தன் எதிரிகளை அழிக்க, சிலுவை அடையாளத்தை முதன்முதலில் பயன்படுத்தினான்.  எதிரிகளை அழிக்கச் சிலுவை அடையாளத்தைக் கான்சுடன்டைன் பயன்படுத்தியதில் தவறு ஒன்றும் இல்லை.  ஏனென்றால் அது ஐரோப்பிய அரசியல் கொலைக்கருவியே ஆகும். 
PDFஆக சேமிக்க

கிறித்துவின் நற்செய்தியை அறிவிக்கும் அடையாளம் சிலுவையா? - 2

கிறித்தவம் ஆசிய ஆன்மிக இயக்கம் – சிலுவை ஐரோப்பியக் கொலைக் கருவி

1. இயேசு கிறித்து ஆசியாவில் பிறந்த ஆசியர்.  இயேசு கிறித்துவைச் சிலுவையில் அடித்துக் கொன்றவர்கள் ஐரோப்பிய ஆட்சியாளர்கள் ஆவர்.  அந்த ஐரோப்பிய ஆட்சியாளர்களால் சிறப்பிக்கப்பட்ட கருவிதான் சிலுவையாகும்.

2. இயேசு கிறித்து ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த ஆசியர் என்பதைப் போலவே இயேசு கிறித்துவின் பன்னிரண்டு சீடர்களும் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த ஆசியர்களே!
PDFஆக சேமிக்க