1 ஆக., 2011

திருநீறா? சிலுவையா? - 4

திருநீற்றைப் பயன்படுத்தும் திருச்சபை
ஐரோப்பியர் பிடியில் சிக்காமலும் சிலுவை அடையாளத்தைப் பயன்படுத்தாமலும் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு முன்னர் உலகில் பரவி, திருநீற்றை அடையாளமாகப் பயன்படுத்தி வரும் கிறித்துவின் திருச்சபைப் பிரிவினர் உலகில் இருக்கின்றார்களா?  என்று தேடிப் பார்க்க வேண்டியது இப்பொழுது அவசியமாகிறது.

PDFஆக சேமிக்க

திருநீறா? சிலுவையா? - 3

சாம்பலும் உயிர்த்தெழுந்த உடலும்

செங்கிடாரி ஊருக்கு வெளியே பலியிடப்பட்டுத் தகனம் செய்யப்பட்டு சாம்பல் உருவாக்கப்பட்டது போன்று, இயேசு கிறித்துவும் எருசலேமுக்கு வெளியே பலியிடப்பட்டு அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்தார்.  உயிர்த்தெழுந்த இயேசுவைப் போன்று சாம்பல் விளங்குகின்றது.  எவ்வாறு?
PDFஆக சேமிக்க

திருநீறா? சிலுவையா? - 1

“திருநீற்றுத் திருநாள்” என்று சிறப்பிக்கப்படுவது சாம்பல் புதன்கிழமை.  கிறித்தவத் திருநாள்களில் சாம்பல் புதன்கிழமை ஒரு முக்கியமான நாள் ஆகும்.  இயேசு கிறித்துவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதல் இவற்றை நினைவு கூர்ந்து அதற்கென நோன்பு மேற்கொள்ளும் தபசுகாலத்தின் தொடக்க நாள் திருநீற்றுத் திருநாள் அல்லது சாம்பல் புதன்கிழமை ஆகும்.
PDFஆக சேமிக்க

கிறித்துவின் நற்செய்தியை அறிவிக்கும் அடையாளம் சிலுவையா? - 3

ஐரோப்பிய அரசியல் மதம்
            கான்சுடன்டைன் தன் எதிரிகளை அழிக்க, சிலுவை அடையாளத்தை முதன்முதலில் பயன்படுத்தினான்.  எதிரிகளை அழிக்கச் சிலுவை அடையாளத்தைக் கான்சுடன்டைன் பயன்படுத்தியதில் தவறு ஒன்றும் இல்லை.  ஏனென்றால் அது ஐரோப்பிய அரசியல் கொலைக்கருவியே ஆகும். 
PDFஆக சேமிக்க

கிறித்துவின் நற்செய்தியை அறிவிக்கும் அடையாளம் சிலுவையா? - 2

கிறித்தவம் ஆசிய ஆன்மிக இயக்கம் – சிலுவை ஐரோப்பியக் கொலைக் கருவி

1. இயேசு கிறித்து ஆசியாவில் பிறந்த ஆசியர்.  இயேசு கிறித்துவைச் சிலுவையில் அடித்துக் கொன்றவர்கள் ஐரோப்பிய ஆட்சியாளர்கள் ஆவர்.  அந்த ஐரோப்பிய ஆட்சியாளர்களால் சிறப்பிக்கப்பட்ட கருவிதான் சிலுவையாகும்.

2. இயேசு கிறித்து ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த ஆசியர் என்பதைப் போலவே இயேசு கிறித்துவின் பன்னிரண்டு சீடர்களும் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த ஆசியர்களே!
PDFஆக சேமிக்க