திருநீற்றைப் பயன்படுத்தும் திருச்சபை
ஐரோப்பியர்
 பிடியில் சிக்காமலும் சிலுவை அடையாளத்தைப் பயன்படுத்தாமலும் கி.பி. 
நான்காம் நூற்றாண்டிற்கு முன்னர் உலகில் பரவி, திருநீற்றை அடையாளமாகப் 
பயன்படுத்தி வரும் கிறித்துவின் திருச்சபைப் பிரிவினர் உலகில் 
இருக்கின்றார்களா?  என்று தேடிப் பார்க்க வேண்டியது இப்பொழுது 
அவசியமாகிறது.
![]()  | 
| தூய தோமா | 
இயேசுகிறித்துவின்
 மாணவர்களில் மிக நீண்ட தூரம் சென்று கிறித்துவின் நற்செய்தியை அறிவித்த 
பெருமை புனித தோமையருக்கும் மட்டுமே இருக்கின்றது.  அவர் கி.பி. 52இல் 
தமிழகம் வந்து நற்செய்தியை அறிவித்து கி.பி. 72இல் மைலாப்பூரில் கொலை 
செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார் என்பது கிறித்துவத் திருச்சபை 
வரலாற்றின் ஒரு பகுதி.
அவர்
 அறிவித்த நற்செய்தியின் பயனாக உருவானதே திருக்குறள் என்பதும் 
திருக்குறளின் அடிப்படையில், பக்தி இயக்கம் உருவாகி சைவ, வைணவ சமயங்கள் 
எழுந்தன என்பதும் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் புதிய 
உண்மைகளாகும்.
சிதைக்கப்பட்டு புதையுண்டு கிடப்பது
தோமா
 வழிக் கிறித்தவத்தின் பிரிவுகளான சைவ, வைணவ சமயங்கள், பின்னர் தீ 
வழிபாட்டையுடைய ஆரியப் பிராமணர்களின் பிடியில் அகப்பட்டு ஆரியர்களின் சாதி 
ஏற்றத்தாழ்வுக் கொள்கையால் சிதைக்கப்பட்டு இன்று ‘இந்து மதம்’ என்ற 
கோட்டைக்குள் அடையாளம் காண இயலாநிலையில் புதையுண்டு கிடக்கின்றன.  
புதையுண்டு கிடக்கும் அரிய உண்மைகளைத் தோண்டித் தோண்டி வெளியே கொண்டு வர 
வேண்டிய நிலையில் அவை இருக்கின்றன.  இந்த நிலையில் சைவ, வைணவ சமயங்களில் 
புதைந்து கிடக்கும் திருநீறு பற்றிய வரலாற்றை நோக்குவோம்.
-  
      - தொடரும்
(உலகத்
 தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் 
எழுதிய ‘திருநீறா? சிலுவையா?’ என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக